Tuesday, June 21, 2011

21/06/2011

http://idlyvadai.blogspot.com/2011/06/blog-post_16.html
ஒன்று: அன்று அவ்வாறு சொன்ன பொது கலைஞர் ஆட்சி அதை விட மோசமாக இருக்கும்
என்று எதிர்பார்க்கவில்லை. (தமிழக மக்கள் எண்ணமும் அவ்வாறே இருந்தது.). பின்பு எதிர்பார்ப்பு தவறு என்று உணர்ந்தபின் எண்ணம் மாறுவது தான் இயற்கை. இதில் அதிசயம் ஒன்றும் இல்லை.
இரண்டு: தமக்கு நல்லது இல்லை என்றால் ஊருக்கே நல்லது இல்லை என்று நினைப்பது மனித குணம். காங்கிரஸ் தனக்கு ஆபத்து என்றால் நாட்டுக்கே கேடு என்று அலறும் (ராமதேவ், ஹஜாரே உண்ணாவிரதம்.) தனக்கு ஆபத்து என்றால் தமிழுக்கு ஆபத்து என்று அலறுவது தமிழ் இனத்தலைவர் .
அதே போல் அம்மையார் மீண்டும் வருவது தமக்கு நல்லது இல்லை என்று எண்ணிய ரஜினி, நாட்டுக்கே கேடு என்று அலறி இருக்கிறார்.

Friday, June 17, 2011

17/06/2011

http://www.sinthikkavum.net/2011/06/blog-post_3992.html
மனுவிற்குப் பிறகு எவ்வளவோ சிந்தனையாளர்கள் வந்து, பழைய சிந்தனைகளை மாற்றி
புதிய வழக்கங்களை, விதிமுறைகளை, வழக்கில் கொண்டு வந்து விட்டன. உதாரணத்திற்கு திருமண வயது இப்போது தொண்ணூற்று ஒன்பது
விழுக்காடு பதினெட்டிற்கு மேலேயே நடக்கின்றன; ராஜஸ்தானில், உத்தர் பிரதேசத்தில் ஓரிரு திருமணங்கள்
பதினைந்து வயதில் நடக்கலாம். அதே போல் தான் விதவை மறு மணமும் .
நாம் பதிய வேண்டியது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனு கூறிய அபத்தங்கள் என்ன
என்பது அல்ல; பின் வந்த காலங்களில் இந்துக்கள் புதிய சிந்தனைகளை ஏற்றுக்கொண்டு தம் செயல்களை, நடை முறைகளை
மாற்றிக் கொண்டார்கள் என்பதே. இன்னும் பல மாற்றங்கள் வரவேண்டும்
என்றிருக்கலாம். அதற்கு முயல்வோம்.
எனினும், குர்ஆனில் சொன்னது தான் இறுதி விதி,
இடைப்பட்ட ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளில் பற்பல மாற்றங்கள் அறிவியலிலும், சமூகவியலிலும், மாற்றங்கள் வந்துவிட்டாலும், குரான் அந்த கால கட்டத்த்ற்கு ஏற்றபடி சொன்னவற்றை இந்த கால கட்டத்தில்
மீள் பார்வை செய்வது தவறு;
அதில் சொன்ன படியே இப்போதும் செய்வோம் என்று சொல்லும்
இஸ்லாமியர்களை விட இந்துக்கள் மேல்
என்ற உண்மையைக் கூறுங்கள்.
இல்லை பகுத்தறிவுப்பாசறை இந்துக்களிடையே ஒரு காலத்தில் இருந்த பழக்க வழக்கங்களை மீண்டும் மீண்டும் அலுக்காமல் சொல்லுமே தவிர, இஸ்லாமிலும், கிருத்தவர்களிலும் இன்றும் உள்ள மூட அணுகுமுறைகளைப் பற்றி சொல்லக் கூடாதா?

Tuesday, May 17, 2011

17/05/2011

கலைஞர் செய்த துரோகம் தமிழ் நாட்டிற்கு அதிகமா அல்லது ஈழத்துக்கு அதிகமா என்று பட்டி மண்டபமே நடத்தலாம். ஈழத் தமிழர்கள் கொல்லப்படும் போது உண்ணாவிரதம் நாடகம் கேவலமானது; மைய அரசுடன் உருப்படியாக ஒன்றும் செய்ய வில்லை தான் என்று மனம் உருகி கலைஞர் அழ வேண்டும். போரின் உச்சத்தில், தில்லி சென்று தம் மகனுக்கும், மகளுக்கும், அவர் நண்பருக்கும், பேரனுக்கும் மந்திரி பதவி, எந்த துறை என்று பேரம் பேசியது, அது போல் வந்த துறைகளிலே அண்டத்தை விட பெரிய ஊழல் செய்து கின்னஸ் வரலாற்று ஊழல் செய்யுங்கால் (அந்த ஊழலை முதலில் வெளி வந்த போது அதை சண் தொலைகாட்சி தான் மீண்டும் மீண்டும் ஒளி பரப்பி நாற அடித்தது என்பதை மறந்து) ஆரிய திராவிட சதி என்று பிலாக்கணம் வைத்தது, என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
ழகரம் தயவு செய்து இதற்கு பதில் எழுத வேண்டும். (அனானியாக வருவதற்கு வருந்துகிறேன்.)

17/05/2011

"குடும்பத்தில் எல்லோரையும் அரசியலில் நுழைத்தது தவறு; மையத்தில் உள்ள அமைச்சர்கள் மட்டும் அல்ல, தமிழ்நாட்டிலும் பெரும்பாலான அமைச்சர்களும், அவர் அடிப்பொடிகளும் தினம் தோறும் ஊழல்கள் செய்து ஒவ்வொரு ஊரிலும், தொகுதியிலும் கழகத்தின் பெயரை நாற அடித்து விட்டார்கள்; ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் பணம் பலருக்கு போனது போல கலைஞர் தொலைக் காட்சிக்கும் வந்தது; கையொப்பம் இட்டது தயாளு அம்மாளுவும், கனிமொழியும்; தவிர திரை உலகில் குடும்பத்தின் நடவடிக்கைகள் பலரை நஷ்டம் அடைய வைத்தன " என்றும்
"இனிமேல், ஸ்டாலின் மாத்திரமே அரசியலில் இருப்பார், அவர் கழகத்தை தலைமை தாங்கி வழி நடத்துவார், அதற்கு, கழகத்தில் ஒரு மனதாக இதற்கு ஒப்புதல் இல்லை என்றால் குடும்பத்துக்கு வெளியிலிருந்து தலைவர் வருவார்; குடும்பத்தை விட கழகமே பெரியது; (வைகோ மீண்டும் வந்தால் தலைமை தாங்கி நடத்தட்டும்) " என்றும் தலைவரும், மற்ற கழக தொண்டர்களும் பேசினால் சரியாக இருக்கும்.

ஜெயலலிதாவிற்கு எவரும் வாக்கு அளிக்கவில்லை. இரண்டு கொள்ளிகளில், ஒன்று அதிகம் காந்துகிறது என்று தூர எறிந்து விட்டார்கள். அவர் அமைச்சரை எப்படி அவமானப்படுத்தினார் என்றெல்லாம் எழுத வேண்டாம். திசை மாறிப் போகிறோம். நம் சட்டைப்பையில் சாணத்தை வைத்துக்கொண்டு ஜெயின் புடவை ஓட்டையைப் பற்றி எழுதினால், நம் சீர்திருத்தப் பணி துவங்காது. கழகம் மு,கவின் கடந்த பதினைந்து வருட காலத்தில் சீர் அழிந்து விட்டது. அதை நேர் செய்வோம். இல்லையெனில், நிச்சயமாகச் சொல்கிறேன், இன்னும் ஐந்து ஆண்டு கழித்து அம்மாவைத் தூக்கி எறிய தமிழகம் நினைக்கும் போது கழகம் நல்ல கொள்ளி என்று காணப்பட வேண்டாமா? http://lakaram.blogspot.com/2011/05/blog-post.html

Thursday, May 5, 2011

vimarisinam:6/5/2011

பின்னூட்டக்காரர்கள் சொவது போல் கடல் ஒரு சாக்கு தான்.
அது போல் இங்கு நடக்காததற்கு சில காரணங்கள் :

# இலங்கை தமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லை; தனிதனி குழுக்கு (ஈழம், மலைத் தமிழர், வணிகம் செய்யும் கொழும்பு தமிழர்கள்) வெவ்வேறு பிரச்னைகள்; ஒன்று கூடி ஒரே வரிசை படுத்தவில்லை.
# ஈழத் தமிழர் தாம் இலங்கையில் வங்காளி-ஓடியாக்காரர்களுக்கு முன்பே வந்த அல்லது அங்கேயே ஆதி காலத்திலிருந்து வாழ்ந்து வரும் பூர்வ குடியினர் என்பதை நிலை நாட்டுவதும், தம் தனித்தன்மையை பாதுகாப்பதில் எடுத்துக்கொண்ட சிரமம், தற்போது சூழ்நிலையில் சிங்க ளவருடன் சேர்ந்தே இருந்துகொண்டு, தம் இனத்துக்கு நன்மை செய்வது எப்படி என்று சிந்திக்காதது. (ஒரு கோணத்தில் பார்த்தால் திராவிட நாடு என்று பேசுவதை விட்டு, தமிழ் நாடு இந்தியாவின் ஒரு பகுதி; மையத்திலும் நம் பங்கை பெறுவோம் என்று முடிவெடுத்தது போன்று).
# தமிழக தலைவர்கள் தொப்புள் கோடி உறவு என்று வசனம் பேசிக்கொண்டு, தம் கட்சிக்கு எது நன்மை என்று குறுகிய புத்தியுடன் செயல் பட்டது
# தமிழகத்தில் உள்ள அரசியல் சாராத தலைவர்கள், உ-ம: நெடுமாறன் தமிழரின் நலத்தை விட தமிழர் பெருமையையே அதிகம் கருதியது.
# தமிழ் நாட்டு பொது குடிமகன் இலங்கை பிரச்னையின் ஆழத்தை புரிந்து கொள்ள முயலாமல் எதாவது செய்ய வேண்டும் என்று உணர்வு பூர்வமாக நினைத்தது தவிர ஒன்றும் செய்யாதது.
# இந்திய அரசுக்கு இலங்கை பிரச்னையை சரிவர தெளிவு படுத்தாதது, அரசின் ஒரு பங்கு வகித்த தமிழர்கள், (எந்த கட்சியினர் ஆயினும்) தம் கடமை ஆற்றாதது. இது கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழர் செய்யத்தவறியது.

இவை இந்தியா திபெததவர்களுக்கு, வாங்க தேச வங்காளிகளுக்கு செய்தது போல் இலங்கை தமிழர்களுக்கு செயாதது என் என்று யோசித்தது.

இலங்கை தமிழர் குழுக்கள், ஈழ்ழத்தமிழர் செயல்முறை, தீவிரவாதிகள், விடுதல்லை போராட்டவாதிகள் என்ற உணர்வை ஏற்படுத்ததவறியது, etc தனி

5/5/2011

http://ashroffshihabdeen.blogspot.com/2011/05/blog-post_03.html
So Osama was only a creation of America; He did nothing bad on his own; America to be blamed for all his sins; Nobody said anything like this till last week, though one reader has told there are several evidences that he doing the American bidding.
I am yet to see one post that said, if he was the head of Al-qaida, and if it has caused so much destruction thro blasts and Twin-Tower type damages, he deserved to die.
I wish this polarisation does not turn uglier. Amen.

Tuesday, May 3, 2011

03/05/2011

மூன்று அல்லது நான்கு குழுக்கள் என்ற புரிதலை சாயம் தீட்டி கொச்சைப் படுத்துகிறீர்கள். அனைத்து தமிழர்களின் பிரச்னைகள் ஒன்றானால், இலங்கையிலேயே உள்ள பிற பகுதி தமிழர்கள் ஈழத்து அணுகுமுறையை ஆதரிக்காதது ஏன்? இலங்கை அரசில் தமிழர் அமைச்சர்களாக உள்ளனரே. அவரகள் தமிழர்கள் பிரச்னைகளை, தமழர் கோணத்தில் எடுத்துச் சொல்வது இல்லையா? மேலும், தோட்ட தமிழர்களை தம்மில் ஒரு பகுதியாக ஏன், தமக்கு இணையாக் நினைத்து அல்லது பாவித்து நடத்தினாரா? அவர்களை தாழ்வாக நடத்தினர் என்றும் அதனால் பிற தமிழர்களின் ஆதரவு ஈழத்து தமிழர்களுக்கு என்றும் கிட்டியதில்லை என்றே பதிவுகளில் கண்டிருக்கிறேன்.
இந்தியாவைப் பொறுத்தவை ஈழத்தமிழர் பிரச்சனையை வாங்க தேசத்து வங்காளிகளுக்கு உதவி, அவர்கள் பாகிஸ்தானில் இருந்து பிரிய, தனி தேசம் அமைக்க உதவி செய்தது போல் செய்ய முயவில்லை என்பது உண்மையே. அதற்கு முதல் காரணம், தமிழ் நாட்டில் உள்ள புலி ஆதரவாளர்கள் உண்மை நிலையை சரியாக புரிந்து, எடுத்து சொல்லாதது தான் என்பது ஏன் எண்ணம்.
பதிவருக்கும் ஒரு வேண்டுகோள்: தயவு செய்து ஆரிய/திராவிட வாதத்தை முன் வைக்க வேண்டாம்; அது பிரச்னையை திசை திருப்புகிறது. கருணாநிதி போன்றோருக்கு இது அவல்; இதை மென்று கொண்டே, உருப்படியாக ஒன்றும் செய்யாமல், மலர்க் கிரீடங்கள், விழாக்கள் எடுக்க வேண்டுமானால் உதவலாம்.
வலைப் பகுதி எண்ணத்தை விட்டு வெளியே வாருங்கள்; தமிழர்கள் இந்தியர்கள்; ஆரியர், திராவிடர் என்று பிரிவுகள் இல்லை. இந்தியாவில் நடக்கும் நல்லது கெட்டதுகளில் தமிழர் பங்கு தவறாமல் உண்டு; மிகப் பெரிய ஊழலான 1,76,000 கோடியை திருடியது தமிழர் தலைமையில் செயல் பட்ட கூட்டணியே. அதில் ஷஹீத் உஸ்மான் பலவா, சந்தொலியா, அம்பானியின் கைத்தடிகள், என அனைத்து தரப்பினரும் கூட்டு கொள்ளையே. இந்தியாவில் சாதி, இன, மத வேறுபாடுகளை மறந்து கூட்டாக செயல் பட நாங்கள் பழகி விட்டோம்.
innum சொல்ல பல இருக்கின்றன. நீண்டு கொண்டே போவதால், நிறுத்துகிறேன்.
உங்கள் தலைப்பு சரியே: புதிய ஆலோசனைகளை துவங்க வேண்டும்.
http://natramizhan.wordpress.com/2011/04/29/%e0%ae%88%e0%ae%b4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95/#comment-170

3/5/2011

Monday, April 18, 2011

18/04/2011

http://illakkia.blogspot.com/2011/04/blog-post_17.html We drag the name of BJP in such contexts without fail: True, they did not do anything to bring the Bill to the Parliament. But, in the same breath, did the Left government in West Bengal in its 37 years bring any legislation comparable to the Lok Ayuktha of Karnataka? Or, did the left calitions in Kerala in any of its three 5-year stints since. Of course, we do have all respect to Comrade Achytanandan for his crusade on corruption, not sparing Karunakaran, Balakrishna Pillai or even Comrade Pinaraye Vijayan.

Friday, April 8, 2011

08/04/2011 pinnoottam

http://kgjawarlal.wordpress.com/2011/04/07/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%b9%e0%ae%b8/ வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்காக ஒம்புட்ஸ்மன் என்ற ஒருவர் இருக்கிறார். ஒரு வங்கி தமக்கு சரியான வட்டி அளிக்கவில்லை (தவறான வட்டி வீதம்), தம் காசோலையை நிலுவை இருந்தபோதும் தவறுதலாக திருப்பி, இழப்பு ஏற்படுத்தியது என்பது போன்ற புகார் கொடுத்தால், ஒம்புட்ஸ்மன் மூன்று மாதங்களுக்குள் வங்கியின் மறுமொழியைக் கேட்டுப்பெற்று ஆணை பிறப்பிக்கிறார்; அதை மீறவேண்டும் என்றால் உயர் நீதி மன்றம் செல்ல வேண்டும். இதன் மூலம் நூற்றுக்கணக்கான விஷயங்கள் நீதி மன்றம் சென்று ஆண்டுகள் இழுக்கடிக்காமல் முடிவு வந்தும் விடுகிறது. இது போன்ற அரசுடன் ஏற்படும் குறைகளை, கேட்க, விசாரிக்க ஒம்புட்ஸ்மன் போன்ற அமைப்பை இந்த லோக் பால்/ லோக் ஆயுக்தா உருவாக்கும். எனவே பொது மக்களுக்கு அரசு ஊழியர்களின் சுனக்கத்தால் நின்று, தாம் ஒன்றும் செய்ய இயலா நிலை மாறும். அரசிடம் உள்ள குறைகளுக்கு, அரசியல்வாதிகளை விட அரசு அதிகாரிகளின் கடமை செய்யாமையே காரணம் ஆகும். கையூட்டு எதிர்பார்த்து பணியை செய்யாமல் இருப்பதே அதிகப்படியான காரணம் என்ற பொதுவான எண்ணம் உள்ளது. அதை இந்த அமைப்பு தீர்க்கும். அரசியல்வாதிகளும் பெரிய அளவில் ஊழல் செய்ய முடியாமல் போகும்.

Friday, March 25, 2011

25/03/2011

http://athiyamhttp://athiyamaan.blogspot.com/2011/03/blog-post_24.html
Thank you for the post.An eye-opener for many.My father was teacher in elementary school (1935-73). I have heard from him the essence of your post.EVR viewed everything only through one prism of brahmin-superior caste system; either he did not have the intellectual capacity to look at issues from wider perspective or he deliberately highlighted the negative aspects in pursuance of his agenda.It suited the successive Dravida leaders to orchestrate the same line of thinking and portray Rajaji as a person working to perpetuate the caste-culture.

comment 25/03/2011

http://cms.boloji.com/index.cfm?md=Content&sd=Articles&ArticleID=10735

Wednesday, March 23, 2011

23/03/2011

http://bharathbharathi.blogspot.com/2011/03/blog-post_22.html
கடைசி வரை காக்க வைத்து, அவருக்கு பத்துக்கு மேல் தேறாது என்று சொல்லிய விதம் சகோதரிக்கு புதிதல்ல. அவர் கோபம் ஒரு விதத்தில் நியாயமானதே.
ஆனால், ஒரு விஷயத்தை பதிவர்கள் சரியாக கோடிட்டு காண்பிக்கவில்லை: இலங்கை தமிழர்கள் குறித்து தமிழகத்திலும், பிறகு இந்திய அரசிடமும் சரியான கருத்து உருவாக ஒருவரும்- ரிபீட்டு- ஒருவரும் ஒன்றும் செய்ய வில்லை.
thamizh நாட்டிற்குள்ளேயே இலங்கை பிரச்னையை சரியாகப் புரிந்து கொண்டவர்கள் இருபது-இருபத்தைந்து சதவீதம் இருக்கலாம்; அவர்களிலும்,
- ராஜீவ் காந்தி மரணம்
- புலிகள் இலங்கை தமிழர்களின் ஒரு பகுதியின் நலத்தையே பேசுகிறார்கள்;
- புலிகள் பிற தமிழ் குழுக்களை களைந்து கொடி நாட்டியவர்கள்
- இந்திய இறையாண்மை; இலங்கை இறையாண்மை;
- புலிகள் தங்கள் கொள்கையை விளக்கி இந்திய அரசின் துணையை ஒரு போதும் நாட வில்லை;
- இலங்கை முஸ்லீம்களை இரக்கம் இல்லாமல் அழித்தவர்கள் (மசூதியில் தொழுது கொண்டு இருந்தவர்களை குண்டு போட்டு தாக்கியது)
- போரில் தம் நிலை பலமில்லை என்று சரியாக மதிப்பிடாமல் அல்லது தெரிந்த பின்னும் போரைத் தொடர்ந்து அப்பாவி மக்களை காவு கொடுத்தார்கள்
என்ற பல கோணங்கள் உள்ளன; இது தமிழர்கள் இடையே மட்டுமே உலவும் கருத்துக்கள் என வெவ்வேறு பதிவுகளில் கண்டிருக்கிறேன். இவற்றில் எது பெரும்பாலும் சரி அல்லது பெரும்பாலும் தவறு என்று நான் என் மதிப்பீட்டை வழங்கவில்லை.
வைகோவும், நெடுமாறனும், சீமானும், அப்போதப்போது கனைக்கும் தொல் திருமா போன்றவர்களும் பல சுதிகளில், வெவ்வேறு பாடல்களை கத்திக் கொண்டு (cacophony) இருந்தார்களே தவிர, செயல் முறையில் பலன் அளிக்கும் வகையில் ஒன்றும் செய்யவில்லை.
எனவே வைகோ காங்கிரசை தோற்கடிக்கிறேன் என்று இலங்கை தமிழர்கள் பெயர் சொல்லி எத்தனை தொகுதிகளில் டெபாசிட் தக்க வைத்துக் கொள்ள முடியும்?

Wednesday, March 16, 2011

http://azeezahmed.wordpress.com/2011/03/17/tsun/#comment-573

March 17, 2011 at 11:09 #1
Now we know the three hundred persons in Mumbai, who were shot or otherwise killed by Kasab and his group on 26/11/2007 were bad and were punished by Allah (let peace be with Him).
More so, even the people in Gujarat who were killed in the clashes after the Godhra train-burning, also had to meet death because of their sins.
May Allah bless their souls. And bless the million others waiting in this world to bring the death to their fello-humans.
AMEN.

Wednesday, March 9, 2011

10 03 2011

இப்பவெல்லாம் சாதி யாரு பார்க்குறாங்க?
நல்ல பதிவு
சாதியை பெயரின் பகுதியாக பயன்படுத்தும் வழக்கம் நூறு ஆண்டுகளாக இல்லை. (என் தந்தை பிறந்த வருடம்: 1913; அவர் தந்தையின் SSLC சான்றிதழில் பெயரில் சாதி இருக்காது திண்டுக்கல் : 1900 -ம் ஆண்டு என நினைக்கிறேன்). ஐம்பதுகளில் அறுபதுகளில் நான் பள்ளியில்/கல்லூரியில் இருந்த காலங்களில் சாதி உடன் படிக்கும் மாணவர்களுக்கு தெரியாது. விடுதியில் தந்தை ஊரிலிருந்து வந்துவிட்டால் குழூஉக்குறி வைத்து சில முறை சாதி இதுவாக இருக்கலாம் என ஊகிக்கலாம். ஆனால் சாதி பற்றி பேசுவதோ, கேட்பதோ வெட்கப்படும்படியான விஷயம் என பொதுவாக மாணவர்கள் நினைத்த காலம். நான் பிறந்து வளர்ந்த கிராமத்திலே கூட, நண்பனின் வீட்டுக்கு சென்றால், இருக்கும் பகுதியைக் கொண்டு இதுவாக இருக்கலாம் என பேசிக்கொள்வது கேட்டிருக்கிறேன். பல நண்பர்களின் வீடுகளுக்கு சென்றிருக்கிறேன்; அவர்கள் என்ன சாதி என்று ஒரு கணமேனும் நினைத்துப் பார்த்ததில்லை. அது பற்றி நினைத்தாலே அநாகரிகம் என நினைக்கும் வண்ணம் சூழல் இருந்தது. அப்போதைய முதல் அமைச்சர் காமராஜ நாடார் என்று சரித்திரப் பயிற்சியில் எழுதியதற்காக என் நண்பன் முட்டியில் அடி வாங்கியது நினைவில் பசுமையாக இருக்கிறது. கலப்பு திருமணத்தைப் பற்றி பேசுவது பெருமை. முடிந்தவரை ஊக்குவிக்க வேண்டும் என்பதே பதின்ம வயதில் இருந்த பையன்கள் நினைத்தனர். நூறு ஆண்டுகளில் சாதி பிரிவினை இருக்காது என உள்ளத்தளவில் நம்பியவர்கள் நாங்கள்.
அப்படி இருந்த தமிழ்நாடு இன்று எப்படி ஆகி விட்டது? (நான் 1972 முதல் வெளி மாநிலங்களில் வசித்து வருபவன்; இடையில் மிகச் சில ஆண்டுகள் சென்னையில் வசித்தது தவிர. இப்போதும் வெளி மாநிலமே). .
அப்போது சாதி சங்கங்கள் நகரங்களிலே கூட இல்லையென நினைக்கிறேன். தொழில் முறை சங்கங்கள் இருக்கும்; மளிகைக்கடைகாரர்கள் சங்கம் போன்று: இதில் பெரும்பாலும் நாடார்களோ, கோமுட்டிகளோ இருக்கலாம். ஆனால் அது பற்றி பொதுவில் பேச்சு இருக்காது. அலுவல் கமிட்டியில், அனைத்து சாதிகளும் இடம் பெறும் வண்ணம் பார்த்துக் கொள்வார்கள். போகப் போக இந்த உணர்வே இருக்காது என்று நம்பியவர்கள் நாங்கள்.
இப்போது வக்கீல்களில் இருந்து ஆசிரியர்கள் வரை,சாதி சங்கங்கள் வைத்து குரல் கொடுக்கிறார்கள்; கூச்சல் போடுகிறார்கள்; கொடி பிடிக்கிறார்கள். தம் பிரிவு இனத்தவர் உயர்வு, பங்கு, பங்கு மறுக்கப் படுவது, அவர்களை கை தூக்கி விட வேண்டும் என நினைக்கிறார்கள். அவமானம். அதைவிடக் கொடுமை: அதைப் பற்றி வெளிப்பட கூச்சமில்லாது பேசுவது.
இப்போது ஆட்சியில் இருப்பவர் எங்களுக்கு கொஞ்சம் சீனியர் : கருணாநிதி, அன்பழகன் போன்று; அல்லது எங்கள் தலைமுறை: சிதம்பரம், துரை முருகன் போன்று. இவர்கள் பள்ளிகளில் கல்லூரிகளில் இருந்தபோது பேசிய மொழி வேறு; இவர்கள் பதவியைப் பிடித்தவுடன் அணுகும் முறை வேறு.
இது போன்ற பதிவுகளைக் காணும் போது நினைத்துப் பார்த்திருக்கிறேன்: நிலை இவ்வளவு மோசமாகிப் போனதன் காரணம் என்னவோ ?
இரண்டு காரணங்கள் தோன்றுகின்றன: ஒன்று திராவிட கட்சிகளே எழுபது எண்பது சதவீதம்; காங்கிரசு, கம்யூனிஸ்டுகள் சுதந்திரா/ஜனதா போன்றவை இருபது இருபத்தைந்து சதவீதம். . அவர்களே சாதி ஒழிப்பைப் பற்றி சமூக உணர்வு என்று பெரியாரிசம் பேசி நாற்காலியைப் பிடித்தவர்கள் சாதி பிரிவினைகளை தொடக்கத்தில் மறைமுகமாகவும், பின்பு நேரடியாகவும் ஊக்குவித்தது. இரண்டு அரசு வேளைகளில் ஒதுக்கீடு, அதன் காரணமாக அதன் சில கெட்ட விளைவுகள், பல நல்ல விளைவுகளை விட வீர்யமாக இருந்த கொடுமை. ,
இது என் சொந்தப் பார்வை. உங்கள் பின்னூட்டங்களில் உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்.
நீண்ட பின்னூட்டத்துக்கு மன்னிக்கவும்
. http://amizhtha.wordpress.com/2011/03/04/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA/#comment-166

Friday, March 4, 2011

jothiji tiruppur : 5 march 2011

உங்கள் பதிவுகள் மிக நடுநிலையுடன் எழுதப்படுபவை : ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் emotions overtake rationale. : அது ஈழம்.
ஈழம் காரணமாக காங்கிரசு வாக்கு எதுவும் பெறாது என்ற தொனியில் உங்கள் பதிவு.
பொது தேர்தலில் ஒரு வாக்காளன் அளிக்கும் வாக்கு பல காரணிகளை உள்ளடக்கியது. மின்சார வெட்டு முதல் குடிசை ஒழிப்பு திட்டங்கள் , நூற்று எட்டு ஆம்புலன்சே சேவை, இலவச டி வி , ஊழல்கள், குடும்ப செழிப்பு, என்று ஒரு பக்கமும் சென்ற ஆட்சியில் சில நன்மைகள், பல கெடுதல்கள், கொட நாடு ஒய்வு, உடன் பிறவா சகோதரி திரைக்குப்பின் அரசாட்சி, என்று ஒவ்வொரு கட்சியின் பலப்பல சாதக பாதகங்களையும் ஒன்றாகப் பார்த்து தனக்கு முதன்மையாகத் தோன்றும் காரணத்துக்காக எக்ஸ் கட்சிக்கோ ஒய் கட்சிக்கோ வாக்கு இட வேண்டிய தேர்தல் முறை நமது. இதில் ஈழம் மிக முக்கிய காரணமாகப் பார்க்கப்பட்டு அதனால் காங்கிரசு வாக்கு பெறாது என்பது சரியா?
பாராளுமன்றத் தேர்தலில் கூட சிவகங்கையில் கடைசி நேரத்தில் தான் பின் வழியாக ப.சி என்று தெரிந்தாலும், பல இடங்களில் காங்கிரசுக்கு வாக்குகள் விழுந்தன அல்லவா?
இது என் மனதில் உறுத்திக்கொண்டிருக்கும் எண்ணம். உங்கள் கருத்துக்களை எதிர்த்து எழுத வேண்டும் என்று எழுதியது அல்ல.

comment: 5 March 2011




http://truetamilian.blogspot.com/2011/03/2.html

Only one point on the long comment of Mr Manivannan:
That auction method followed in the initial stage of spectrum allotment in 1990's was recognised; and first-come-first method with the revenue-sharing method was followed since 2001 or so; This is what enaled low call charges for the user. Irregularities might have been there in the allotment during the period of Mr Mahajan; that can not justify the irregularities made in a bigger scale by Mr.Dayanidhi Maran and Mr.Raja.
Moreover, (i)the closing date of applications was foreclosed on a later date
(ii) the window was kept open for a mere 45 minutes for submission of the demand draft for an amount of Rs 1650 crores or so and Bank Guarantee, etc. and (iii) the announcement of the time for submission was given only a few hours earlier in the morning for submission of a demenad draft, etc
shows the process was blatantly carried out to favour a few; whether any consideration was there is not the issue. That a few bidders were favoured is somehting noone can disprove. Even diehard supporters of Mr.Raja and his leader can not defend him.

Saturday, March 05, 2011 6:13:00 AM

Delete

Friday, January 7, 2011

08/01/2011

http://ujiladevi.blogspot.com/2011/01/blog-post_03.html#comment-form

சுவாமிநாதன் அவர்களைக் குறை கூற முடியாது. அப்போது இருந்த நிலை உற்பத்தியை பெருக்க வேண்டும் என்ற ஒரே நோக்குடன் செயல் படுத்த வைத்தது. விளைச்சல் குறையவில்லை; பயிர் செய்யும் பரப்பு அதே அளவோ,அல்லது குறைந்தோ இருந்தாலும் அளவு அதிகமாகவே ஆகயுள்ளது எனத் தோன்றுகிறது.
மானியம் என்று வந்து விட்டதால், அளவுக்கு அதிகமாக போடுவது, பொட்டாசியம் அல்லது பாஸ்பரம் வேண்டிய நிலையிலும் யூரியா போடுவது என்று குளறுபடிகள் ஒரு காரணம். நீர்ப்பாசனம் பெரிய அளவில் மேன்மை அடைந்ததாக தெரியவில்லை.: நர்மதா குறுக்கே அணையும், அதன் காரணமாக மத்திய பிரதேஷ், மற்றும் குஜராத்துக்கு நீர் பாசனம் தவிர. அரசுகள் தொலை நோக்கு திட்டங்கள் எதுவும் கொண்டுவரவில்லை.
உலகமயமாக்கல் துவங்கிய பின், உணவு உற்பத்தியில் தன்னிறைவு என்றெல்லாம் பேசப்படுவது கூட இல்லை. அது பழைய பாஷன்.
மாநில அளவிலும் நீர் நிலைகளை பராமரித்தல் என்பன அறுபத்தேழுக்குப் பின் சரி இல்லை என என் நண்பன் கூறுகிறான். எனக்கு இது குறித்த விவரம் தெரியவில்லை.