Friday, March 25, 2011

25/03/2011

http://athiyamhttp://athiyamaan.blogspot.com/2011/03/blog-post_24.html
Thank you for the post.An eye-opener for many.My father was teacher in elementary school (1935-73). I have heard from him the essence of your post.EVR viewed everything only through one prism of brahmin-superior caste system; either he did not have the intellectual capacity to look at issues from wider perspective or he deliberately highlighted the negative aspects in pursuance of his agenda.It suited the successive Dravida leaders to orchestrate the same line of thinking and portray Rajaji as a person working to perpetuate the caste-culture.

comment 25/03/2011

http://cms.boloji.com/index.cfm?md=Content&sd=Articles&ArticleID=10735

Wednesday, March 23, 2011

23/03/2011

http://bharathbharathi.blogspot.com/2011/03/blog-post_22.html
கடைசி வரை காக்க வைத்து, அவருக்கு பத்துக்கு மேல் தேறாது என்று சொல்லிய விதம் சகோதரிக்கு புதிதல்ல. அவர் கோபம் ஒரு விதத்தில் நியாயமானதே.
ஆனால், ஒரு விஷயத்தை பதிவர்கள் சரியாக கோடிட்டு காண்பிக்கவில்லை: இலங்கை தமிழர்கள் குறித்து தமிழகத்திலும், பிறகு இந்திய அரசிடமும் சரியான கருத்து உருவாக ஒருவரும்- ரிபீட்டு- ஒருவரும் ஒன்றும் செய்ய வில்லை.
thamizh நாட்டிற்குள்ளேயே இலங்கை பிரச்னையை சரியாகப் புரிந்து கொண்டவர்கள் இருபது-இருபத்தைந்து சதவீதம் இருக்கலாம்; அவர்களிலும்,
- ராஜீவ் காந்தி மரணம்
- புலிகள் இலங்கை தமிழர்களின் ஒரு பகுதியின் நலத்தையே பேசுகிறார்கள்;
- புலிகள் பிற தமிழ் குழுக்களை களைந்து கொடி நாட்டியவர்கள்
- இந்திய இறையாண்மை; இலங்கை இறையாண்மை;
- புலிகள் தங்கள் கொள்கையை விளக்கி இந்திய அரசின் துணையை ஒரு போதும் நாட வில்லை;
- இலங்கை முஸ்லீம்களை இரக்கம் இல்லாமல் அழித்தவர்கள் (மசூதியில் தொழுது கொண்டு இருந்தவர்களை குண்டு போட்டு தாக்கியது)
- போரில் தம் நிலை பலமில்லை என்று சரியாக மதிப்பிடாமல் அல்லது தெரிந்த பின்னும் போரைத் தொடர்ந்து அப்பாவி மக்களை காவு கொடுத்தார்கள்
என்ற பல கோணங்கள் உள்ளன; இது தமிழர்கள் இடையே மட்டுமே உலவும் கருத்துக்கள் என வெவ்வேறு பதிவுகளில் கண்டிருக்கிறேன். இவற்றில் எது பெரும்பாலும் சரி அல்லது பெரும்பாலும் தவறு என்று நான் என் மதிப்பீட்டை வழங்கவில்லை.
வைகோவும், நெடுமாறனும், சீமானும், அப்போதப்போது கனைக்கும் தொல் திருமா போன்றவர்களும் பல சுதிகளில், வெவ்வேறு பாடல்களை கத்திக் கொண்டு (cacophony) இருந்தார்களே தவிர, செயல் முறையில் பலன் அளிக்கும் வகையில் ஒன்றும் செய்யவில்லை.
எனவே வைகோ காங்கிரசை தோற்கடிக்கிறேன் என்று இலங்கை தமிழர்கள் பெயர் சொல்லி எத்தனை தொகுதிகளில் டெபாசிட் தக்க வைத்துக் கொள்ள முடியும்?

Wednesday, March 16, 2011

http://azeezahmed.wordpress.com/2011/03/17/tsun/#comment-573

March 17, 2011 at 11:09 #1
Now we know the three hundred persons in Mumbai, who were shot or otherwise killed by Kasab and his group on 26/11/2007 were bad and were punished by Allah (let peace be with Him).
More so, even the people in Gujarat who were killed in the clashes after the Godhra train-burning, also had to meet death because of their sins.
May Allah bless their souls. And bless the million others waiting in this world to bring the death to their fello-humans.
AMEN.

Wednesday, March 9, 2011

10 03 2011

இப்பவெல்லாம் சாதி யாரு பார்க்குறாங்க?
நல்ல பதிவு
சாதியை பெயரின் பகுதியாக பயன்படுத்தும் வழக்கம் நூறு ஆண்டுகளாக இல்லை. (என் தந்தை பிறந்த வருடம்: 1913; அவர் தந்தையின் SSLC சான்றிதழில் பெயரில் சாதி இருக்காது திண்டுக்கல் : 1900 -ம் ஆண்டு என நினைக்கிறேன்). ஐம்பதுகளில் அறுபதுகளில் நான் பள்ளியில்/கல்லூரியில் இருந்த காலங்களில் சாதி உடன் படிக்கும் மாணவர்களுக்கு தெரியாது. விடுதியில் தந்தை ஊரிலிருந்து வந்துவிட்டால் குழூஉக்குறி வைத்து சில முறை சாதி இதுவாக இருக்கலாம் என ஊகிக்கலாம். ஆனால் சாதி பற்றி பேசுவதோ, கேட்பதோ வெட்கப்படும்படியான விஷயம் என பொதுவாக மாணவர்கள் நினைத்த காலம். நான் பிறந்து வளர்ந்த கிராமத்திலே கூட, நண்பனின் வீட்டுக்கு சென்றால், இருக்கும் பகுதியைக் கொண்டு இதுவாக இருக்கலாம் என பேசிக்கொள்வது கேட்டிருக்கிறேன். பல நண்பர்களின் வீடுகளுக்கு சென்றிருக்கிறேன்; அவர்கள் என்ன சாதி என்று ஒரு கணமேனும் நினைத்துப் பார்த்ததில்லை. அது பற்றி நினைத்தாலே அநாகரிகம் என நினைக்கும் வண்ணம் சூழல் இருந்தது. அப்போதைய முதல் அமைச்சர் காமராஜ நாடார் என்று சரித்திரப் பயிற்சியில் எழுதியதற்காக என் நண்பன் முட்டியில் அடி வாங்கியது நினைவில் பசுமையாக இருக்கிறது. கலப்பு திருமணத்தைப் பற்றி பேசுவது பெருமை. முடிந்தவரை ஊக்குவிக்க வேண்டும் என்பதே பதின்ம வயதில் இருந்த பையன்கள் நினைத்தனர். நூறு ஆண்டுகளில் சாதி பிரிவினை இருக்காது என உள்ளத்தளவில் நம்பியவர்கள் நாங்கள்.
அப்படி இருந்த தமிழ்நாடு இன்று எப்படி ஆகி விட்டது? (நான் 1972 முதல் வெளி மாநிலங்களில் வசித்து வருபவன்; இடையில் மிகச் சில ஆண்டுகள் சென்னையில் வசித்தது தவிர. இப்போதும் வெளி மாநிலமே). .
அப்போது சாதி சங்கங்கள் நகரங்களிலே கூட இல்லையென நினைக்கிறேன். தொழில் முறை சங்கங்கள் இருக்கும்; மளிகைக்கடைகாரர்கள் சங்கம் போன்று: இதில் பெரும்பாலும் நாடார்களோ, கோமுட்டிகளோ இருக்கலாம். ஆனால் அது பற்றி பொதுவில் பேச்சு இருக்காது. அலுவல் கமிட்டியில், அனைத்து சாதிகளும் இடம் பெறும் வண்ணம் பார்த்துக் கொள்வார்கள். போகப் போக இந்த உணர்வே இருக்காது என்று நம்பியவர்கள் நாங்கள்.
இப்போது வக்கீல்களில் இருந்து ஆசிரியர்கள் வரை,சாதி சங்கங்கள் வைத்து குரல் கொடுக்கிறார்கள்; கூச்சல் போடுகிறார்கள்; கொடி பிடிக்கிறார்கள். தம் பிரிவு இனத்தவர் உயர்வு, பங்கு, பங்கு மறுக்கப் படுவது, அவர்களை கை தூக்கி விட வேண்டும் என நினைக்கிறார்கள். அவமானம். அதைவிடக் கொடுமை: அதைப் பற்றி வெளிப்பட கூச்சமில்லாது பேசுவது.
இப்போது ஆட்சியில் இருப்பவர் எங்களுக்கு கொஞ்சம் சீனியர் : கருணாநிதி, அன்பழகன் போன்று; அல்லது எங்கள் தலைமுறை: சிதம்பரம், துரை முருகன் போன்று. இவர்கள் பள்ளிகளில் கல்லூரிகளில் இருந்தபோது பேசிய மொழி வேறு; இவர்கள் பதவியைப் பிடித்தவுடன் அணுகும் முறை வேறு.
இது போன்ற பதிவுகளைக் காணும் போது நினைத்துப் பார்த்திருக்கிறேன்: நிலை இவ்வளவு மோசமாகிப் போனதன் காரணம் என்னவோ ?
இரண்டு காரணங்கள் தோன்றுகின்றன: ஒன்று திராவிட கட்சிகளே எழுபது எண்பது சதவீதம்; காங்கிரசு, கம்யூனிஸ்டுகள் சுதந்திரா/ஜனதா போன்றவை இருபது இருபத்தைந்து சதவீதம். . அவர்களே சாதி ஒழிப்பைப் பற்றி சமூக உணர்வு என்று பெரியாரிசம் பேசி நாற்காலியைப் பிடித்தவர்கள் சாதி பிரிவினைகளை தொடக்கத்தில் மறைமுகமாகவும், பின்பு நேரடியாகவும் ஊக்குவித்தது. இரண்டு அரசு வேளைகளில் ஒதுக்கீடு, அதன் காரணமாக அதன் சில கெட்ட விளைவுகள், பல நல்ல விளைவுகளை விட வீர்யமாக இருந்த கொடுமை. ,
இது என் சொந்தப் பார்வை. உங்கள் பின்னூட்டங்களில் உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்.
நீண்ட பின்னூட்டத்துக்கு மன்னிக்கவும்
. http://amizhtha.wordpress.com/2011/03/04/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA/#comment-166

Friday, March 4, 2011

jothiji tiruppur : 5 march 2011

உங்கள் பதிவுகள் மிக நடுநிலையுடன் எழுதப்படுபவை : ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் emotions overtake rationale. : அது ஈழம்.
ஈழம் காரணமாக காங்கிரசு வாக்கு எதுவும் பெறாது என்ற தொனியில் உங்கள் பதிவு.
பொது தேர்தலில் ஒரு வாக்காளன் அளிக்கும் வாக்கு பல காரணிகளை உள்ளடக்கியது. மின்சார வெட்டு முதல் குடிசை ஒழிப்பு திட்டங்கள் , நூற்று எட்டு ஆம்புலன்சே சேவை, இலவச டி வி , ஊழல்கள், குடும்ப செழிப்பு, என்று ஒரு பக்கமும் சென்ற ஆட்சியில் சில நன்மைகள், பல கெடுதல்கள், கொட நாடு ஒய்வு, உடன் பிறவா சகோதரி திரைக்குப்பின் அரசாட்சி, என்று ஒவ்வொரு கட்சியின் பலப்பல சாதக பாதகங்களையும் ஒன்றாகப் பார்த்து தனக்கு முதன்மையாகத் தோன்றும் காரணத்துக்காக எக்ஸ் கட்சிக்கோ ஒய் கட்சிக்கோ வாக்கு இட வேண்டிய தேர்தல் முறை நமது. இதில் ஈழம் மிக முக்கிய காரணமாகப் பார்க்கப்பட்டு அதனால் காங்கிரசு வாக்கு பெறாது என்பது சரியா?
பாராளுமன்றத் தேர்தலில் கூட சிவகங்கையில் கடைசி நேரத்தில் தான் பின் வழியாக ப.சி என்று தெரிந்தாலும், பல இடங்களில் காங்கிரசுக்கு வாக்குகள் விழுந்தன அல்லவா?
இது என் மனதில் உறுத்திக்கொண்டிருக்கும் எண்ணம். உங்கள் கருத்துக்களை எதிர்த்து எழுத வேண்டும் என்று எழுதியது அல்ல.

comment: 5 March 2011




http://truetamilian.blogspot.com/2011/03/2.html

Only one point on the long comment of Mr Manivannan:
That auction method followed in the initial stage of spectrum allotment in 1990's was recognised; and first-come-first method with the revenue-sharing method was followed since 2001 or so; This is what enaled low call charges for the user. Irregularities might have been there in the allotment during the period of Mr Mahajan; that can not justify the irregularities made in a bigger scale by Mr.Dayanidhi Maran and Mr.Raja.
Moreover, (i)the closing date of applications was foreclosed on a later date
(ii) the window was kept open for a mere 45 minutes for submission of the demand draft for an amount of Rs 1650 crores or so and Bank Guarantee, etc. and (iii) the announcement of the time for submission was given only a few hours earlier in the morning for submission of a demenad draft, etc
shows the process was blatantly carried out to favour a few; whether any consideration was there is not the issue. That a few bidders were favoured is somehting noone can disprove. Even diehard supporters of Mr.Raja and his leader can not defend him.

Saturday, March 05, 2011 6:13:00 AM

Delete