Friday, March 4, 2011

jothiji tiruppur : 5 march 2011

உங்கள் பதிவுகள் மிக நடுநிலையுடன் எழுதப்படுபவை : ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் emotions overtake rationale. : அது ஈழம்.
ஈழம் காரணமாக காங்கிரசு வாக்கு எதுவும் பெறாது என்ற தொனியில் உங்கள் பதிவு.
பொது தேர்தலில் ஒரு வாக்காளன் அளிக்கும் வாக்கு பல காரணிகளை உள்ளடக்கியது. மின்சார வெட்டு முதல் குடிசை ஒழிப்பு திட்டங்கள் , நூற்று எட்டு ஆம்புலன்சே சேவை, இலவச டி வி , ஊழல்கள், குடும்ப செழிப்பு, என்று ஒரு பக்கமும் சென்ற ஆட்சியில் சில நன்மைகள், பல கெடுதல்கள், கொட நாடு ஒய்வு, உடன் பிறவா சகோதரி திரைக்குப்பின் அரசாட்சி, என்று ஒவ்வொரு கட்சியின் பலப்பல சாதக பாதகங்களையும் ஒன்றாகப் பார்த்து தனக்கு முதன்மையாகத் தோன்றும் காரணத்துக்காக எக்ஸ் கட்சிக்கோ ஒய் கட்சிக்கோ வாக்கு இட வேண்டிய தேர்தல் முறை நமது. இதில் ஈழம் மிக முக்கிய காரணமாகப் பார்க்கப்பட்டு அதனால் காங்கிரசு வாக்கு பெறாது என்பது சரியா?
பாராளுமன்றத் தேர்தலில் கூட சிவகங்கையில் கடைசி நேரத்தில் தான் பின் வழியாக ப.சி என்று தெரிந்தாலும், பல இடங்களில் காங்கிரசுக்கு வாக்குகள் விழுந்தன அல்லவா?
இது என் மனதில் உறுத்திக்கொண்டிருக்கும் எண்ணம். உங்கள் கருத்துக்களை எதிர்த்து எழுத வேண்டும் என்று எழுதியது அல்ல.

No comments:

Post a Comment