Friday, June 17, 2011

17/06/2011

http://www.sinthikkavum.net/2011/06/blog-post_3992.html
மனுவிற்குப் பிறகு எவ்வளவோ சிந்தனையாளர்கள் வந்து, பழைய சிந்தனைகளை மாற்றி
புதிய வழக்கங்களை, விதிமுறைகளை, வழக்கில் கொண்டு வந்து விட்டன. உதாரணத்திற்கு திருமண வயது இப்போது தொண்ணூற்று ஒன்பது
விழுக்காடு பதினெட்டிற்கு மேலேயே நடக்கின்றன; ராஜஸ்தானில், உத்தர் பிரதேசத்தில் ஓரிரு திருமணங்கள்
பதினைந்து வயதில் நடக்கலாம். அதே போல் தான் விதவை மறு மணமும் .
நாம் பதிய வேண்டியது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனு கூறிய அபத்தங்கள் என்ன
என்பது அல்ல; பின் வந்த காலங்களில் இந்துக்கள் புதிய சிந்தனைகளை ஏற்றுக்கொண்டு தம் செயல்களை, நடை முறைகளை
மாற்றிக் கொண்டார்கள் என்பதே. இன்னும் பல மாற்றங்கள் வரவேண்டும்
என்றிருக்கலாம். அதற்கு முயல்வோம்.
எனினும், குர்ஆனில் சொன்னது தான் இறுதி விதி,
இடைப்பட்ட ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளில் பற்பல மாற்றங்கள் அறிவியலிலும், சமூகவியலிலும், மாற்றங்கள் வந்துவிட்டாலும், குரான் அந்த கால கட்டத்த்ற்கு ஏற்றபடி சொன்னவற்றை இந்த கால கட்டத்தில்
மீள் பார்வை செய்வது தவறு;
அதில் சொன்ன படியே இப்போதும் செய்வோம் என்று சொல்லும்
இஸ்லாமியர்களை விட இந்துக்கள் மேல்
என்ற உண்மையைக் கூறுங்கள்.
இல்லை பகுத்தறிவுப்பாசறை இந்துக்களிடையே ஒரு காலத்தில் இருந்த பழக்க வழக்கங்களை மீண்டும் மீண்டும் அலுக்காமல் சொல்லுமே தவிர, இஸ்லாமிலும், கிருத்தவர்களிலும் இன்றும் உள்ள மூட அணுகுமுறைகளைப் பற்றி சொல்லக் கூடாதா?

No comments:

Post a Comment