Tuesday, May 3, 2011

03/05/2011

மூன்று அல்லது நான்கு குழுக்கள் என்ற புரிதலை சாயம் தீட்டி கொச்சைப் படுத்துகிறீர்கள். அனைத்து தமிழர்களின் பிரச்னைகள் ஒன்றானால், இலங்கையிலேயே உள்ள பிற பகுதி தமிழர்கள் ஈழத்து அணுகுமுறையை ஆதரிக்காதது ஏன்? இலங்கை அரசில் தமிழர் அமைச்சர்களாக உள்ளனரே. அவரகள் தமிழர்கள் பிரச்னைகளை, தமழர் கோணத்தில் எடுத்துச் சொல்வது இல்லையா? மேலும், தோட்ட தமிழர்களை தம்மில் ஒரு பகுதியாக ஏன், தமக்கு இணையாக் நினைத்து அல்லது பாவித்து நடத்தினாரா? அவர்களை தாழ்வாக நடத்தினர் என்றும் அதனால் பிற தமிழர்களின் ஆதரவு ஈழத்து தமிழர்களுக்கு என்றும் கிட்டியதில்லை என்றே பதிவுகளில் கண்டிருக்கிறேன்.
இந்தியாவைப் பொறுத்தவை ஈழத்தமிழர் பிரச்சனையை வாங்க தேசத்து வங்காளிகளுக்கு உதவி, அவர்கள் பாகிஸ்தானில் இருந்து பிரிய, தனி தேசம் அமைக்க உதவி செய்தது போல் செய்ய முயவில்லை என்பது உண்மையே. அதற்கு முதல் காரணம், தமிழ் நாட்டில் உள்ள புலி ஆதரவாளர்கள் உண்மை நிலையை சரியாக புரிந்து, எடுத்து சொல்லாதது தான் என்பது ஏன் எண்ணம்.
பதிவருக்கும் ஒரு வேண்டுகோள்: தயவு செய்து ஆரிய/திராவிட வாதத்தை முன் வைக்க வேண்டாம்; அது பிரச்னையை திசை திருப்புகிறது. கருணாநிதி போன்றோருக்கு இது அவல்; இதை மென்று கொண்டே, உருப்படியாக ஒன்றும் செய்யாமல், மலர்க் கிரீடங்கள், விழாக்கள் எடுக்க வேண்டுமானால் உதவலாம்.
வலைப் பகுதி எண்ணத்தை விட்டு வெளியே வாருங்கள்; தமிழர்கள் இந்தியர்கள்; ஆரியர், திராவிடர் என்று பிரிவுகள் இல்லை. இந்தியாவில் நடக்கும் நல்லது கெட்டதுகளில் தமிழர் பங்கு தவறாமல் உண்டு; மிகப் பெரிய ஊழலான 1,76,000 கோடியை திருடியது தமிழர் தலைமையில் செயல் பட்ட கூட்டணியே. அதில் ஷஹீத் உஸ்மான் பலவா, சந்தொலியா, அம்பானியின் கைத்தடிகள், என அனைத்து தரப்பினரும் கூட்டு கொள்ளையே. இந்தியாவில் சாதி, இன, மத வேறுபாடுகளை மறந்து கூட்டாக செயல் பட நாங்கள் பழகி விட்டோம்.
innum சொல்ல பல இருக்கின்றன. நீண்டு கொண்டே போவதால், நிறுத்துகிறேன்.
உங்கள் தலைப்பு சரியே: புதிய ஆலோசனைகளை துவங்க வேண்டும்.
http://natramizhan.wordpress.com/2011/04/29/%e0%ae%88%e0%ae%b4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95/#comment-170

No comments:

Post a Comment