Thursday, May 5, 2011

vimarisinam:6/5/2011

பின்னூட்டக்காரர்கள் சொவது போல் கடல் ஒரு சாக்கு தான்.
அது போல் இங்கு நடக்காததற்கு சில காரணங்கள் :

# இலங்கை தமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லை; தனிதனி குழுக்கு (ஈழம், மலைத் தமிழர், வணிகம் செய்யும் கொழும்பு தமிழர்கள்) வெவ்வேறு பிரச்னைகள்; ஒன்று கூடி ஒரே வரிசை படுத்தவில்லை.
# ஈழத் தமிழர் தாம் இலங்கையில் வங்காளி-ஓடியாக்காரர்களுக்கு முன்பே வந்த அல்லது அங்கேயே ஆதி காலத்திலிருந்து வாழ்ந்து வரும் பூர்வ குடியினர் என்பதை நிலை நாட்டுவதும், தம் தனித்தன்மையை பாதுகாப்பதில் எடுத்துக்கொண்ட சிரமம், தற்போது சூழ்நிலையில் சிங்க ளவருடன் சேர்ந்தே இருந்துகொண்டு, தம் இனத்துக்கு நன்மை செய்வது எப்படி என்று சிந்திக்காதது. (ஒரு கோணத்தில் பார்த்தால் திராவிட நாடு என்று பேசுவதை விட்டு, தமிழ் நாடு இந்தியாவின் ஒரு பகுதி; மையத்திலும் நம் பங்கை பெறுவோம் என்று முடிவெடுத்தது போன்று).
# தமிழக தலைவர்கள் தொப்புள் கோடி உறவு என்று வசனம் பேசிக்கொண்டு, தம் கட்சிக்கு எது நன்மை என்று குறுகிய புத்தியுடன் செயல் பட்டது
# தமிழகத்தில் உள்ள அரசியல் சாராத தலைவர்கள், உ-ம: நெடுமாறன் தமிழரின் நலத்தை விட தமிழர் பெருமையையே அதிகம் கருதியது.
# தமிழ் நாட்டு பொது குடிமகன் இலங்கை பிரச்னையின் ஆழத்தை புரிந்து கொள்ள முயலாமல் எதாவது செய்ய வேண்டும் என்று உணர்வு பூர்வமாக நினைத்தது தவிர ஒன்றும் செய்யாதது.
# இந்திய அரசுக்கு இலங்கை பிரச்னையை சரிவர தெளிவு படுத்தாதது, அரசின் ஒரு பங்கு வகித்த தமிழர்கள், (எந்த கட்சியினர் ஆயினும்) தம் கடமை ஆற்றாதது. இது கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழர் செய்யத்தவறியது.

இவை இந்தியா திபெததவர்களுக்கு, வாங்க தேச வங்காளிகளுக்கு செய்தது போல் இலங்கை தமிழர்களுக்கு செயாதது என் என்று யோசித்தது.

இலங்கை தமிழர் குழுக்கள், ஈழ்ழத்தமிழர் செயல்முறை, தீவிரவாதிகள், விடுதல்லை போராட்டவாதிகள் என்ற உணர்வை ஏற்படுத்ததவறியது, etc தனி

No comments:

Post a Comment